பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்..!

பவானிசாகர் அணை.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பவானிசாகர் அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் 15 முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (டிச.28) வியாழக்கிழமை மாலை முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதேசமயம் அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை (டிச.29) இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்ட நிலவரம்:-
நீர் மட்டம் - 82.35 அடி ,
நீர் இருப்பு - 16.96 டிஎம்சி ,
நீர் வரத்து வினாடிக்கு - 503 கன அடி ,
நீர் வெளியேற்றம் வினாடிக்கு - 800 கன அடி ,
அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனத்திற்காக வினாடிக்கு 700 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீரும் என மொத்தம் 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும், பவானிசாகர் அணை பகுதியில் மழைப்பொழிவு இல்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu