/* */

நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்

நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி மூட்டைகள், கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

நம்பியூர் அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட வாகனம்.

நம்பியூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் நேற்றிரவு நம்பியூர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பிக்கப் வேனில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தனர். சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மூட்டைகளை பற்றி விசாரிக்கும் போது அவர்கள் முன்னுக்குப் பின்னாக முரணாக பதில் கூறியுள்ளார். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதில் ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மூட்டைகளை சோதனை செய்து கொண்டிருந்த போது மூட்டைகளை வாகனத்தை ஏற்றியவர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர். ரேசன் அரிசி இருந்த பிக்கப் வாகனம் மற்றும் 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து நம்பியூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து உணவு பொருள் பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்கள் தேடி வருகின்றனர்.

Updated On: 13 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!