ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி: ஏப்.29ல் துவக்கம்

ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி: ஏப்.29ல் துவக்கம்
X

கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் தொடர்பான இலவசப் பயிற்சி வரும் 29ம் தேதி துவங்குகிறது.

ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் தொடர்பான இலவசப் பயிற்சி வரும் 29ம் தேதி துவங்குகிறது.

இதுகுறித்து ஈரோடு கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஈரோட்டில் உள்ள கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், வரும் ஏப்ரல் 29ம் தேதி ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல் தொடர்பான இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது. இந்த பயிற்சியானது ஏப்ரல் 29ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறவுள்ளன. பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி வகுப்பு நடைபெறும். ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.

பயிற்சி, சீருடை, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தற்போது நடக்கிறது.

இப்பயிற்சியானது, கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவா்கள் 0424-2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213, 7200650604 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture