/* */

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: களையிழந்த மாட்டுச்சந்தை

இரவுநேர ஊரடங்கு காரணமாக, ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில், மாடுகள் வரத்து குறைந்து, களையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா கட்டுப்பாடு எதிரொலி: களையிழந்த மாட்டுச்சந்தை
X

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு இன்று ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

எனினும், தமிழகத்தில் இரவு, 10:00 மணி முதல் அதிகாலை, 4:00 மணி வரை, இரவுநேர ஊரடங்கு அமலில் இருப்பதால், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா போன்ற பிற மாநில வியாபாரிகள், இந்த சந்தைக்கு அதிகளவில் வரவில்லை தென்மாவட்டங்கள், மலைப்பகுதி மாடுகளும் வரத்தாகவில்லை.

இதுபற்றி, மாட்டு சந்தை உதவி மேலாளர் ராஜேந்திரன் கூறியதாவது: கருங்கல்பளையம் மாட்டுச்சந்தையில் வழக்கமாக, 800 முதல், 900 மாடுகள் வரத்தாகி, விற்பனை களைகட்டும். ஆனால் தற்போது கொரோனா தொற்று அச்சம், இ–பாஸ், ஊரடங்கு போன்ற காரணங்களால், வெளிமாநில வியாபாரிகளின் வருகை மிகக்குறைவாகவே இருந்தது.

இன்று, 350பசுக்கள், 100எருமைகள், 50கன்றுகள் என 500 மாடுகளே வரத்தாக இருந்தன. அதேபோல் விற்பனையும் மிகக்குறைவாகவே நடந்து, களையிழந்து காணப்பட்டது. வெளிமாநில வியாபாரிகளின் வருகை குறைவாக இருந்ததால், 40 சதவீத மாடுகளே விற்பனையாகின. விற்பனையாகாத மாடுகளை, அதன் உரிமையாளர்கள் சோகத்துடன் வேனில் ஏற்றி, ஊருக்கு அழைத்து சென்றனர். இவ்வாறு கூறினார்.

Updated On: 22 April 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை