/* */

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!

ஈரோட்டில், வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு, சொந்த பணம் 2 ஆயிரத்துடன், 3ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை பொருட்களை வழங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

வாழ்வாதாரம் இழந்த பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்: ஈரோட்டில் நெகிழ்ச்சி!
X

ஈரோடு அக்ரஹாரம் அருகேயுள்ள நஞ்சப்பா நகரைச் சேர்ந்த பெண்ணுக்கு நிவாரண பொருட்களை சொந்த செலவில் வழங்கிய இன்ஸ்பெக்டர் கோபிநாத்.

ஈரோடு அக்ரஹாரம் அருகேயுள்ள நஞ்சப்பா நகரைச் சேர்ந்தவர் சபீரா. கடந்த சில ஆண்டுகளாக அக்ரஹாரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று வீட்டு வேலை செய்து வருகிறார். அத்துடன், தனது இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

கொரோனா நோய்ப்பரவல் காரணமாக முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. நோய்ப்பரவல் அச்சம் காரணமாக வீடுகளில் அந்நிய நபர்களை அனுமதிக்க பலரும் தயங்கி, மறுத்து வருகின்றனர். இதனால் சபீராவால், கடந்த 2 மாதங்களாக வீடுகளுக்கு சென்று பணியாற்ற முடியவில்லை. இதனால், அவருக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டு குடும்பச் செலவுகளை செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் கருங்கல்பாளையம் காவல்நிலையத்திற்கு சென்ற சபீரா, தனக்கு உதவி செய்யமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டார். அவரின் சூழலை அக்கறையோடு விசாரித்த கருங்கல்பாளையம் இன்ஸ்பெக்டர் கோபிநாத், தனது சொந்த பணத்தில் இருந்து அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும், 3 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகளைக் கொண்ட தொகுப்பு பைகளை வழங்கினார்.

காவல்நிலையம் என்றால் கண்டிப்பு, கெடுபிடி, காவல்துறையினர் கடுமையாக இருப்பார்கள் என்று நினைத்துச் சென்ற சபீராவுக்கு உதவிய இன்ஸ்பெக்டரின் மனிதாபிமானச் செயலை பலரும் மனதாரப் பாராட்டி வருகின்றனர். இன்ஸ்பெக்டருக்கு, சபீராவின் குடும்பத்தினர் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Updated On: 16 Jun 2021 2:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...