/* */

ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி

கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.

HIGHLIGHTS

ஈரோட்டில் டெங்கு பரவும் அபாயம்: மழைநீர் தேக்கத்தால் மக்கள் அவதி
X

வெண்டிபாளையம் பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீர்.

காசிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெண்டிபாளையத்தில் சுமார் இரண்டாயிரம் மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு போக்குவரத்திற்கு பிரதான சாலையாக இங்குள்ள இரண்டு ரயில்வே நுழைவு பாலங்களும் பயன்பாட்டில் உள்ளது. தற்போது பருவகால மழை தொடங்கி அனைத்து இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஈரோட்டில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கன மழையால், வெண்டிபாளையத்தில் இருக்கும் இரு ரயில்வே நுழைவு பாலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. வடிகால் வாய்க்கால் சரியில்லாத நிலையில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  2. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  7. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  9. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  10. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...