/* */

கருங்கல்பாளையம் சந்தைக்கு அதிகளவில் மாடுகள் வரத்து

கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடு வரத்து அதிகரித்த போதும் மழையால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது.

HIGHLIGHTS

கருங்கல்பாளையம்  சந்தைக்கு அதிகளவில் மாடுகள் வரத்து
X

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கால்நடை சந்தையானது, வாரம்தோறும் புதன்கிழமை இறைச்சிகளுக்கான மாடுகள் விற்பனை நடைபெறுகிறது. வியாழக்கிழமை நடைபெறும் சந்தையில், பசு மற்றும் எருமை மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த சந்தையில் தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், விவசாயிகளும் தங்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதோடு மாடுகளை விற்பனையும் செய்கின்றனர்.

குறிப்பாக, அதிக பால் தரக்கூடிய மாடுகளான ஜெர்சி, பிரீஸ் மற்றும் நாட்டு பசு மாடுகளும், முர்ரா ரக எருமைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இன்று நடைபெற்ற சந்தையில், பசு மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை விற்பனையானது. எருமைகள் 30,000 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மாடு வரத்து அதிகரித்த போதும் மழையால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. இன்றைய சந்தையில் 300 பசு மாடுகளும் 500 எருமைகளும் 200 கன்றுகளும் என சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 Nov 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  4. நாமக்கல்
    கல்லூரி கனவு நிகழ்ச்சியில் பங்கேற்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா
  5. பொன்னேரி
    எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி காளிகாம்பாள் ஆலயத்தில் சிறப்பு...
  6. ஒட்டன்சத்திரம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மூன்று மடங்கு உயர்ந்த எலுமிச்சை...
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
  8. சோழவந்தான்
    மதுரை அருகே எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவில் வழங்கப்பட்ட...
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை உலக அன்னையர் தின விழாவில் நடந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி
  10. காஞ்சிபுரம்
    ‘எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அதிமுக இயங்கும்’- செங்கோட்டையன்