கடம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்திருந்த டிரைவர் கைது

கைதான ஜடைசாமி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவுட்காய்.
கடம்பூர் அருகே விலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் வைத்திருந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள அருகியம் பகுதியில் அவுட்டுகாய் எனப்படும் நாட்டு வெடி குண்டுகளை கடத்தி வருவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் குன்றி பிரிவு என்ற இடத்தில் கடம்பூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் அவுட்காய் கடத்தப்பட்டு வந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து சரக்கு வேனை ஒட்டி வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடம்பூர் அருகே உள்ள மேலூர் அருகியத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருடைய மகன் ஜடைசாமி (வயது 32) என்பதும், வனவிலங்குகளை வேட்டையாட அவுட்காய்களை சரக்கு வேனில் கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜடைசாமியை கைது செய்தனர். மேலும் சரக்கு வேனில் இருந்த 16 அவுட்காய்களை பறிமுதல் செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu