/* */

நெருங்கியது தீபாவளி: ஜவுளி வாங்க கடைவீதியில் அலைமோதிய மக்கள் வெள்ளம்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஜவுளிகள் வாங்க ஈரோடு கடை வீதியில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது.

HIGHLIGHTS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஈரோடு மாநகரில் ஜவுளி வாங்க, நேற்று மக்கள் வெள்ளம் அலைமோதியது. மழை ஓரளவு விட்டிருந்ததால் ஏராளமானோர் துணிகள், பொருட்களை வாங்க வந்திருந்தனர். தீபாவளி மக்கள் நெரிசலை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியிலும், தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு உள்ளனர்.

அவ்வகையில் ஈரோடு ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் போலீசார் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்தினர். மேலும் போக்குவரத்து போலீசார், சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கவில்லை. இதேபோல் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிரமக கண்காணித்து வருகின்றனர். ஈரோடு மாநகரில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Updated On: 1 Nov 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...