/* */

அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் துணிக்கடை ஒன்றில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டது இன்று (திங்கட்கிழமை) காலையில் தெரியவந்தது.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் திருட்டு
X

பைல் படம்.

அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் துணிக்கடை ஒன்றில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள துணிகள் திருடப்பட்டது இன்று (திங்கட்கிழமை) காலையில் தெரியவந்தது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் புதூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (45). இவர், பிரம்மதேசம்பாலம் அருகே ஆயத்த ஆடை வைத்துள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.45 மணியளவில் அந்த வழியாக சென்ற ஈஸ்வரன் என்பவர் தங்களது கடையில் இருந்து துணிகளை ஆம்னி வேனில் மர்ம நபர்கள் இருவர் ஏற்றிக் கொண்டு இருப்பதாக கேசவனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த கேசவன் விரைந்து வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு துணிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், திருடப்பட்ட துணிகளின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த அந்தியூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்த புகாரின்பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Updated On: 20 March 2023 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?