/* */

அந்தியூர் அருகே வனப்பகுதியில் காட்டு யானை பலி

அந்தியூர் அருகே பர்கூர் வனச்சரகத்தில், மலைச்சரிவில் கால்தவறி விழுந்து காட்டு யானை ஒன்று பலியானது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட கோவில் நத்தம் வனப்பகுதியில், பர்கூர் வனத்துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது, வடபர்கூர் காப்புக்காடு கௌரிமடுவு என்னும் இடத்தில் மலைச்சரிவில் காட்டு யானை ஒன்று தலையில் அடிபட்டு இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, வனத்துறையினர் பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட வனச்சரக அதிகாரி, சம்பவம் குறித்து மேற்கொண்ட விசாரணை நடத்தினார். இதில், மலைச்சரிவில் யானை வரும் போது கால் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அரசு கால்நடை உதவி மருத்துவர் சுரேஷை வரவழைத்து யானையின் உடலை சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் யானையின் உடலை வனவிலங்குகளின் உணவிற்காக அங்கேயே விடப்பட்டது.

Updated On: 24 Jun 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!