/* */

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கியதில் பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

HIGHLIGHTS

அந்தியூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
X

காட்டு யானை தாக்கி படுகாயமடைந்த பெண்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தொல்லி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொம்மி (55). இவர் அங்குள்ள வனப்பகுதியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த ஒற்றை காட்டு யானை தும்பிக்கையால் பொம்மியை தூக்கி வீசியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து அவரது கணவர் சம்பவம் குறித்து பர்கூர் வனச்சரக அதிகாரி மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொம்மியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் குறித்து பர்கூர் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 May 2021 4:29 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...