/* */

அந்தியூரில் செல்போன் திருட்டு: ஒருவர் சிறையில் அடைப்பு

செல்போன் திருடிய நபரை கைது செய்த அந்தியூர் போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் செல்போன் திருட்டு: ஒருவர் சிறையில் அடைப்பு
X

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம், விராலிகாட்டூரைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார், 41. இவர், நேற்று மாலை, பர்கூர் ரோட்டில் உள்ள தனது காம்ப்ளக்ஸ் முன்பு, இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் கவரில் மூன்று செல்போன்களை வைத்து விட்டு, காம்ப்ளக்ஸுக்கு உள்ளே சென்றார்.
இதைக் கண்காணித்து வந்த, அந்தியூர் மொடக்குறிச்சியானூர், வேடர் காலனியை சேர்ந்த செல்வராஜ் என்பவர், இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று செல்போன்களையும் திருடிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதைப்பார்த்த ரமேஷ் குமார் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விரட்டிப் பிடித்து, செல்வராஜை பிடித்தனர். பின்னர், அந்தியூர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து, செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அந்தியூர் போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Nov 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கால் நூற்றாண்டு காதல் வாழ்க்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைக்கான வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    புது வரவின் புன்னகை! – வாழ்த்துக்களும், வாழ்வியல் சிந்தனைகளும்
  4. வீடியோ
    நடு தெருவுக்கு வந்த Pakistan | | China-வை நம்பினால் இது தான் கதி |...
  5. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு..!
  7. காஞ்சிபுரம்
    மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி..!
  8. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  10. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!