/* */

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

பள்ளிபாளையத்தில் பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குபதிவு.

HIGHLIGHTS

பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு
X

சேதமடைந்த பேக்கரி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையம் பிரிவு என்ற இடத்தில் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த முகமது என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த காசி முருகன் மற்றும் சண்முகம் ஆகியோர், பேக்கரிக்கு சென்று பொருட்களை பெற்று கொண்டு பணத்தை நாளை தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. ஆனால் முகமது இப்போதே பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியதால், வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தகாத வார்த்தையால் திட்டிய மூன்று பேரும் பேக்கரியில் புகுந்து நாற்காலி மற்றும் உள்ளே இருந்த பொருட்களை உடைத்தனர். மேலும் முகமதுவை கையால் தாக்கிய மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் முகமது கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Oct 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!