அந்தியூரில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை
By - S.Gokulkrishnan, Reporter |6 Nov 2021 11:30 PM GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில், இரண்டு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில், நேற்று நடைபெற்ற ஏலத்தில், இரண்டு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு வாழை விற்பனை செய்யப்பட்டது.
வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 23 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 330 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 380 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 200 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 180 ரூபாய் க்கும், மொந்தன் தார் ஒன்று 150 ரூபாய்க்கும் ரஸ்தாளி தார் ஒன்று 470 ரூபாய்க்கும் விற்பனையானது.
மொத்தம் 2 ஆயிரத்து 170 வாழைத் தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், இரண்டு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu