/* */

அந்தியூரில் அமமுக கூண்டோடு கலைந்து, அதிமுகவில் இணைந்தது..!

அந்தியூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவிற்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூரில் அமமுக கூண்டோடு கலைந்து, அதிமுகவில் இணைந்தது..!
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அந்தியூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவிற்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையத்தில், அந்தியூர் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கவுன்சிலர்கள் என 50க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். அதிமுகவில் இணைந்தவர்களுக்கு கே.ஏ.செங்கோட்டையன் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

அதன்பின் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்து அவர் கூறும்போது, அந்தியூரில் அமமுக கூண்டோடு கலைந்து 90 சதவீதம் பேர் அதிமுகவில் இணைத்து கொண்டு உள்ளனர். காரணம் அதிமுக ஒரு வலுவான இயக்கம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களையும் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அண்ணா திமுகவில் ஆர்ப்பரித்து பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். இது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் அதிமுக கரங்களை வலுப்படுத்த இது போன்ற இளைஞர்கள் அதிமுகவில் இணைந்து அதிமுக ஒரே அணியாக தான் இருக்கிறதே தவிர பிரியவில்லை என்ற நிலையை உருவாக்கி வருகின்றனர். கூட்டணியை பொறுத்தவரைக்கும் பொதுச்செயலாளர் தலைமையில் வலுவான கூட்டணியாக அமையும். நாடாளுமன்ற தேர்தல் ஒரு திருப்பு முனையாக அமையும். அதே போல 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி வாகை சூடும் என தெரிவித்தார்.

சபரிமலைக்கு மாலை அணிந்த பள்ளி மாணவர்கள், பள்ளிக்கு வரும் பொழுது பொட்டு, வைத்து வந்தால் பள்ளிக்கு உள்ளே அனுமதி அளிக்கப்படாதது குறித்து கேள்விக்கு, இது போன்ற நிலைகள் எங்கள் கவனத்திற்கு வந்தால் அதை பள்ளி கல்வித்துறைக்கு எடுத்து சொல்லி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலமாக அறிக்கை வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். இந்நிகழ்ச்சியின் போது, கோபி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் வக்கீல் முத்துசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஸ்ரீனிவாசன், ஹரி பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 3 Jan 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  10. ஈரோடு
    ஈரோடு வழியாக வந்த ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு ஊழியர்