/* */

பொள்ளாச்சி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப் படவில்லை என கூறப்படுகிறது.

HIGHLIGHTS

பொள்ளாச்சி அருகே காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
X

சாலை மறியல் போராட்டத்தில் கிராம மக்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாருக்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், அங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் குடி தண்ணீர் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டினர். இதனால் குடிக்கவும், அன்றாட பயன்பாட்டிற்கும் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட வேண்டிய நிலை இருப்பதாக கூறிய அவர்கள், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

இந்த போராட்டம் காரணமாக பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 13 Jan 2024 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!