நீண்ட நாட்களுக்குப் பிறகு கவியருவியில் குளிக்க அனுமதி ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

நீண்ட நாட்களுக்குப் பிறகு கவியருவியில் குளிக்க அனுமதி ; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

கவியருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகள்

சுதந்திர தின விடுமுறை என்பதால், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குளித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அருகே குரங்கு அருவி என அழைக்கப்படும் கவியருவி அமைந்துள்ளது. இந்த அருவி சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடம் என்பதால், இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல், வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து குளிப்பது வழக்கம். மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழையை பொறுத்து, வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிப்பது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழை இப்பகுதியில் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பணிகளுக்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்தனர்.

இந்நிலையில் தற்பொழுது அருவியில் நீர்வரத்து சீராக வரத் தொடங்கியது. இதனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தனர். இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் விடுமுறை என்பதால், அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குளித்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். இதேபோல வார விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story