/* */

பொள்ளாச்சி அருகே பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்

கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது

HIGHLIGHTS

பொள்ளாச்சி அருகே பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர்கள் போராட்டம்
X

கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. அப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பேரூராட்சி தலைவராகவும், துணைத் தலைவராக கிருஷ்ணவேணியும் உள்ளனர். திமுகவை சேர்ந்தவர்கள் இந்த பேரூராட்சி உறுப்பினர்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில், அதிமுக, காங்கிரஸ், சுயேச்சை கவுன்சிலர்களும் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்பட உள்ள நிலையில், பேரூராட்சி அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த அவசர கூட்டத்திற்கு இன்று காலை கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அவசரக் கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த பத்துக்கு, மேற்பட்ட கவுன்சிலர்கள் பேரூராட்சி நுழைவாயில் கதவை பூட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று நடந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானுவை முற்றுகையிட்டு கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தங்களது கையெழுத்துக்களை போலியாக போட்டதாகவும், மீண்டும் அவற்றை அழித்து விட்டதாகவும் கூறி கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் தேர்தல் அறிவிற்ப்பிற்கு முன்பாக நடத்த வேண்டும் என இந்த கூட்டத்தை அவசர அவசரமாக நடத்தி இருப்பதாகவும், முறையாக கவுன்சிலர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். திமுக கவுன்சிலர்கள் பெரும்பான்மையாக உள்ள கோட்டூர் பேரூராட்சியில் திமுக தலைவரை எதிர்த்து திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Updated On: 16 March 2024 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...