/* */

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாநில செயலாளர் அனுஷா ரவி விலகல்

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்

HIGHLIGHTS

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மாநில செயலாளர் அனுஷா ரவி விலகல்
X

அனுஷா ரவி

கோவையை சேர்ந்த பார்க் கல்வி குழுமங்கள் உரிமையாளரும், தொழிலதிபருமான அனுஷா ரவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் பரப்புரை பிரிவு மாநில செயலாளராக அனுஷா ரவி இருந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த இவரது கல்லூரி நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பங்கேற்றார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் இணைந்துள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அடுத்த ஆண்டு நடக்கும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடாததால் அனுஷா ரவி அதிருப்தி அடைந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருந்து அனுஷா ரவி விலகியுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “மாற்றத்திற்கான அரசியலில் கடந்த மூன்று ஆண்டுகள் தங்களுடனும் ம.நீ.ம. உறவுகளுடனும் இணைந்து பயணிக்க வாய்ப்பளித்தமைக்கும், கட்சியில் பொறுப்புகள் வழங்கியமைக்கும் நன்றி. இந்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் வழங்கிய பொறுப்புக்களை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப மிகச்சிறப்பாக செயல்படுத்தி உங்கள் பாராட்டுக்களை பெற்றதில் மகிழ்ச்சி.

இருப்பினும், தேர்தல் அரசியலில் மய்யம் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். மநீமவில் இருந்து விலகிய அனுஷா ரவி பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 16 March 2024 8:11 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...