/* */

மக்களின் எண்ண ஓட்டங்கள் தான் கருத்துக்கணிப்பாக வருகிறது - அமைச்சர் முத்துசாமி

மக்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளதை கருத்து கணிப்பு காட்டுகிறது. அந்த அளவு முதலமைச்சர் உழைக்கிறார்.

HIGHLIGHTS

மக்களின் எண்ண ஓட்டங்கள் தான் கருத்துக்கணிப்பாக வருகிறது - அமைச்சர் முத்துசாமி
X

அமைச்சர் முத்துசாமி

கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 4 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்கள் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது‌. இதில் வீட்டு வசதிவாரியத் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்கு பயன்பாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உதவும் இயக்கம் திமுக. அதனால் நிறைய திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. நாளை மறுநாள் கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வியூகம் என்பது ரகசியமாக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளிக்க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை திருப்பூர், கோவைக்கு வருகிறார்கள். ஒன்றிய அரசிடம் எதை எல்லாம் வாங்க வேண்டும் என கேட்டறிய உள்ளனர். நாங்கள் கருத்து திணிக்கவில்லை. மக்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளதை கருத்து கணிப்பு காட்டுகிறது. அந்த அளவு முதலமைச்சர் உழைக்கிறார். மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்து கணிப்புகளாக வெளியிடப்படுகிறது. அத்திக்கடவு அவிநாசி பணிகள் முடிவடைந்த பிறகும் சில பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. தாமதம் ஏற்பட காரணமே நிலம் எடுக்க விவசாயிகள் ஒப்புதல் அளிக்காததது தான். விவசாயிகளிடம் பேசிய நிலம் பெற்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

Updated On: 9 Feb 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?