மனைவி, மகள்களை கொலை செய்த கணவர் கைது..!

மனைவி, மகள்களை கொலை செய்த கணவர் கைது..!
X

மனைவி மகளுடன் தங்கராஜ்(பழைய படம்)

தங்கராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு ஹரிணி (9) மற்றும் ஷிவானி (3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் கூலி வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே தங்கராஜ் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டிலேயே இருந்ததாகவும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நாள்தோறும் வாக்குவாதம் சண்டைகள் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை தங்கராஜ் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதாகவும், ஒரு குழந்தையை மீட்ட நிலையில் இன்னொரு குழந்தை மற்றும் மனைவியை மேலே எடுப்பதற்கு உதவி செய்யுங்கள் என்றும் அணுகியுள்ளார்.

தங்கராஜ் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புஷ்பா, ஹரிணி, ஷிவானி ஆகிய மூன்று பேரின் உடல்களையும் மீட்டு இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தங்கராஜை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, தங்கராஜ் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவி புஷ்பாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் புஷ்பா பணம் தர மறுத்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது தங்கராஜ் கோபத்தில் மூத்த மகள் ஹரிணியை தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி உள்ளார். ஹரிணியை மீட்பதற்கு புஷ்பா தண்ணீர் தொட்டிக்குள் குதித்த நிலையில், தங்கராஜ் இளைய மகளான சிவானியையும் தொட்டிக்குள் வீசி தொட்டியை மூடியுள்ளார். இதில் மூன்று பேரும் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தங்கராஜ் ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
கோவையில் புதிய  தகவல் தொழில்நுட்ப கட்டிடம் : முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!
கோவை மாவட்டம் அன்னூரில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
பொள்ளாச்சி அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த 3 வயது குழந்தை
வெற்றிமாறன் தயாரிப்பில் ஒரு படம் உட்பட மூன்று படங்கள் நடிக்கிறேன் : நடிகர் கவின்
சூப்பர் பவர் உள்ளதாக கூறி விடுதி மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்
கோவை மாவட்ட பலகார கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
கோவையில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் 191 பேருக்கு பணி நியமன ஆணை
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வீரகேரளம் பகுதியில் இலவச கண் பரிசோதனை முகாம்!
21999க்கே இவ்ளோ அம்சங்களா? 3D டிஸ்பிளே.. OIS கேமரா.. SONY சென்சார்.. 5500mAh பேட்டரி! எப்படி சாத்தியம்?
தொடர் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து தீவிர விசாரணை : போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தகவல்
கோவை பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கு போட்டு தற்கொலை
அருந்ததியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: திருமாவளவனுக்கு அதியமான் கேள்வி