/* */

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
X

கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த வாகனச் சோதனையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த லாரி பிடிபட்டது. 

கோவை மாவட்ட தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மேட்டுப்பாளையம் அருகே பாரதி நகரில் வாகன தணிக்கை நடத்தினர். சோதனையின்போது, அங்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த லாரிக்குள் ரகசியமாக பேப்பர் லோடின் உள்ளே மறைத்து கொண்டு வரப்பட்ட, மொத்தம் 277.89 லிட்டர் அளவுடைய 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக, லாரி ஓட்டுனர் பாபு மற்றும் உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோரை, காவல் துறையினர் கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 4 Jun 2021 2:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  2. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  3. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  7. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  10. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு