அன்னூரில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது

அன்னூரில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது

Coimbatore News- கைது செய்யப்பட்டவர்

Coimbatore News- அன்னூரில் 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

Coimbatore News, Coimbatore News Today,- சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அன்னூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக அன்னூர் காவல் நிலைய காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அன்னூர் காவல் நிலைய காவல் துறையினர் கெம்மநாயக்கன்பாளையம் அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிசங்கர் சவுத்ரி (35) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல் துறையினரால் நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 128 நபர்கள் மீது 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து சுமார் 194.095 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story