குடிநீர் குழாய் உடைந்ததால் உருவான செயற்கை அருவி ; குளித்து விளையாடிய குழந்தைகள்

குடிநீர் குழாய் உடைந்ததால் உருவான செயற்கை அருவி ; குளித்து விளையாடிய குழந்தைகள்

Coimbatore News- வீணான குடிநீரில் குளித்து மகிழ்ந்த குழந்தைகள்.

Coimbatore News- புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் குழாயின் ஏர் வால்வு ஒன்று உடைந்தததால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணானது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள சாமண்ணா நீரேற்று நிலையத்தில் இருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் எடுத்து வரப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிதாக அமைக்கப்பட்ட குழாயின் ஏர் வால்வு ஒன்று இன்று காலை உடைந்தது.

இதன் காரணமாக குழாயில் இருந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் பீச்சி அடித்து வீணானது. திருப்பூர் மாநகராட்சிக்கு தினமும் 15 கோடியே 60 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து வரப்படும் இந்த திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாய், ரூ.1,120 கோடியே 57 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. குழாய் உடைந்ததன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலையில் தேங்கிய தண்ணீர் காரணமாக, அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்தனர்.

குழாய் உடைப்பின் காரணமாக சாலையில் உருவான திடீர் செயற்கை அருவியில் பெண்கள், குழந்தைகள் குளித்து விளையாடி மகிழ்ந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தகவல் அறிந்த குடிநீர் வடிகால் வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, சேதமடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து, குடிநீர் வடிகால் வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழாயின் பழைய தன்மை மற்றும் போதிய பராமரிப்பு இன்மை காரணமாக குழாய் உடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடிநீர் வீணாவதை தடுக்க, குழாய்களை வழக்கமான பராமரிப்பு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story