/* */

கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!

கோவையில், கோயிலுக்கு செல்வதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

HIGHLIGHTS

கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!
X

கோவை கே.கே. புதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ என்ற சிறுவன், அப்பகுதி பள்ளியில் ௬ம் வகுப்பு படித்து வருகின்றான். ஸ்ரீ கோயிலுக்கு செல்ல அவ்வப்போது பெற்றோர்கள் தந்த காசை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளான்.

அவ்வகையில், ஸ்ரீ சேர்த்து வைத்த பணத்தை கோயிலுக்கு தர நினைத்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்படி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, சிறுவன் ஸ்ரீ, தான் கோயிலுக்கு செல்ல சேர்த்த உண்டியல் பணம் ரூ.2500-ஐ, தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்தான். அதன்படி, தனது தந்தையின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிவாரண நிதி வழங்கியுள்ளான். அச்சிறுவனை கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்பட பலரும் பாராட்டினர்.

Updated On: 27 May 2021 6:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க