/* */

ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி.

ஸ்மார்ட் சிட்டி பணிகளின் ஒரு பகுதியாக ரேஸ்கோர்சில் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெறுகிறது

HIGHLIGHTS

ரேஸ்கோர்சில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி.
X

கோவை மாநகரின் மத்திய பகுதியில் ரேஸ்கோர்சில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அந்த நடைபாதையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பது வழக்கம். இதனால் நடைபயிற்சி செய்பவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். இதன் காரணமாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பாதையை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜெர்மன் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் நவீனமழைநீர் கட்டமைப்பு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பள்ளம் தோண்டி அதன் மேல் துவாரம் உள்ள பிளாஸ்டிக் கூண்டு வைக்கப்பட்டது. அதன் மீது ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு, மண் கொண்டு மூடப்பட் டது.

இந்த மழைநீர் கட்டமைப்பில் சேரும் மழைநீர் ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து நிர்மலா கல்லூரி செல்லும் சாலையோர பூங்காவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு மழைநீரை சேமிக்க 8.5 மீட்டர் அகலம், 7.5 மீட்டர் நீளம் உள்ள 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த தொட்டியில் 6 அடி உயரத்திற்கு துளைகள் உள்ள பிளாஸ்டிக் கூடுகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் இந்த தொட்டி ஜல்லிக்கற்கள் கொண்டு மூடப்பட்டு பூங்கா அமைக்கப்படும்.

இது குறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் சேகரமாகும் மழைநீர் குழாய் மூலம் தொட்டிக்கு கொண்டு செல்லப்படும்.

இதன் மூலம் நடைபயிற்சி பாதையில் மழை காலங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படுவது மட்டுமல்லாது அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று கூறினார்

Updated On: 1 Jan 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...