/* */

துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன் கைது

பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை அப்பகுதிவாசிகள் மடக்கி பிடித்தனர்.

HIGHLIGHTS

துடியலூர்: பி.எஸ்.என்.எல். குடியிருப்பு வளாகத்தில் புகுந்த திருடன் கைது
X

பைல் படம்.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள வெங்கிட்டா புரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (58). இவர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஜூனியர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அலுவலகம் சார்பில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்லில் உள்ளது. சம்பவத்தன்று இந்த குடியிருப்புக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றார். இதனை பார்த்த குடியிருப்பு வாசிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் டவுன்ஹாலை சேர்ந்த கூலித் தொழிலாளி நெல்சன் (27) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Updated On: 20 Jan 2023 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்