/* */

நாளைய பிரதமர் ராகுல்காந்தி தான் : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நம்பிக்கை

அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை.

HIGHLIGHTS

நாளைய பிரதமர் ராகுல்காந்தி தான் : திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நம்பிக்கை
X

கணபதி ராஜ்குமார் வாக்கு சேகரிப்பு

கோவை தொகுதி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், சாயிபாபாகாலனி, என்எஸ்ஆர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். பிரச்சாரத்தின்போது, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பேசுகையில், வரக்கூடிய தேர்தல் என்பது ஒரு முக்கியமான தேர்தல், தளபதி தலைமையிலான திராவிட மாடல் அரசு செய்த சாதனைகளை சொல்லி வாக்குகளை கேட்டு வருகின்றோம். திராவிட முன்னேற்ற கழகம் போகும் இடங்களெல்லாம் அந்த திட்டங்கள் அறிகுறி மக்கள் கொடுக்கும் வரவேற்பிலிருந்து தெரிகிறது. பெண்களுக்கான உரிமை தொகை, பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விடாமுயற்சி கார் விபத்து...! இதுதான் காரணமா?

எதிர்கட்சியினர் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றுப். சிலிண்டர் 500 ரூபாய் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு 1100 ரூபாயில் இருக்கிறது. பெட்ரோல் விலை கட்டுக்கடகாமல் போய்க்கொண்டிருக்கிறது. 100 ரூபாய்கு மேல் உள்ளது. அதுக்கு மேலும் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒவ்வொருத்தர் கணக்கிலும் 15 லட்சம் வரும் என்று சொன்னார்கள், வந்ததா? பொதுமக்கள் நீங்கள் இதை கேட்க வேண்டும். நாங்கள் தலை நிமிர்த்தி வாக்குகளை கேட்போம், ஏனென்று கேட்டால், அறிவித்த திட்டங்கள் அறிவிக்காமலும், பல திட்டங்களை இன்றைக்கு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறார்கள்

விடாமுயற்சி ஏப் 14, மே 1... கொல மாஸ் அப்டேட்!

கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் பொழுதும், மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பது தான் திமுகவின் நோக்கம். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதிமுகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. இந்திய கூட்டணியில் இருக்கிறோம் எங்களை கேட்டால், நாளைய பிரதமர், நாளை ஆட்சி மாற்றம் நடக்கும் பொழுது ராகுல் காந்தி தான் பிரதம மந்திரி என்று நாங்கள் சொல்லுவோம். ஆனால், அதிமுகவினருக்கு அது கிடையாது. இன்றைக்கு தனித்து நிற்பது போல் இருக்கிறது. நாளை, அதிமுக பிஜேபிக்கு எப்பொழுதும் அந்த ஆதரவு கொடுப்பார்கள். இதை பொதுமக்களுக்கு நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையினால், நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த விலைவாசி பிரச்சனை, கேஸ் பிரச்சனை, இந்த ஜிஎஸ்டி பிரச்சனை, எல்லாம் நமது வெற்றியை தேடி தர வேண்டும் என தெரிவித்தார்.

Updated On: 4 April 2024 12:30 PM GMT

Related News