உலக பூமி நாளை முன்னிட்டு கோவையில் பசுமை தன்னார்வலர்களுக்கு விருது

உலக பூமி நாளை முன்னிட்டு  கோவையில் பசுமை தன்னார்வலர்களுக்கு விருது

பசுமை தன்னார்வலர்கள் விருது மற்றும் நற்சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் வழங்கினார்.

இன்று உலகின் 192 நாடுகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூமி தினத்தை கொண்டாடு கின்றனர்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 59 - க்குட்பட்ட சிங்காநல்லூரில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இந்திய சுற்றுச் சூழல் அறக்கட்டளை இணைந்து இன்று பூமி நாளை முன்னிட்டு கோயம்புத்தூரில் ஏரிகளை தூர்வாருதல் , மரக்கன்றுகளை நடுதல் மற்றும் பராமரித்தல் , மியாவாக்கி அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பசுமை தன்னார்வலர்கள் விருது மற்றும் நற்சான்றிதழ்களை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் வழங்கினார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு. மோ. ஷர்மிளா, கணக்குகள் குழுத்தலைவர் தீபா தளபதி இளங்கோ , இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையினர் , மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

உலக புவி நாள் 2023: புவி நாள் 2023க்கான தீம் 'எங்கள் கிரகத்தில் முதலீடு செய்' என்பதாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் கல்விக்காக அமெரிக்க செனட்டர் கெய்லார்ட் நெல்சனால் இந்த தினம் நிறுவப்பட்டது. புவி நாள் என்பது அமெரிக்க செனட்டர் கெய்லார்ட் நெல்சனால் சுற்றுச்சூழல் கல்வியின் வடிவத்தில் நிறுவப்பட்டது. இந்த நாள் ஏப்ரல் 22, 1970 இல் தொடங்கியது, இன்று உலகின் 192 நாடுகளில் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பூமி நாளை கொண்டாடுகின்றனர். புவி நாள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வாகும்; இது உலகிலேயே மிகப் பெரிய குடிமை மைய நடவடிக்கை நாளாகும்.

உலகம் முழுவதும் அறிவியல் கண்டுபிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், சுற்றுச்சூழல் சீர்கேட்டின் வேகமும் அதிகரித்து வருகிறது. எனவே சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க சில தனிநபர்களும் நிறுவனங்களும் இந்த நல்ல நோக்கத்திற்காக முன்வந்துள்ளனர். வடக்கு அரைக்கோளத்தில் வசந்த காலம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் இலையுதிர் காலம் என்பதால் ஏப்ரல் 22 ஒரு முக்கியமான தேதியாக மாறியுள்ளது. முதல் புவி தின கொண்டாட்டங்கள் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், சுமார் 10,000 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமூகங்கள் அமெரிக்கா முழுவதும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story