மனைவி திட்டியதால் கோபம்: ஆத்திரத்தில் கணவன் மாயம்

மனைவி திட்டியதால் கோபம்: ஆத்திரத்தில் கணவன் மாயம்

மகேஷ் 

மனைவி திட்டியதால் கோபித்துக் கொண்டு காதல் கணவன் காணாமல் போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி திருத்தணியைச் சேர்ந்த அனுசியா. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சென்னையில் பணியாற்றி வந்த போது, பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இரு குடும்பத்தாரிடம் பேசி இருவீட்டர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியில் குடியேறி அவர்கள் சக்தி சாலையில் உள்ள சங்கரா மருத்துவமனையில் மகேஷ் பணியாற்றி வந்து உள்ளார்.

இந்நிலையில் அனுசியா திருத்தணியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளார். மீண்டும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வந்த அவர் வீட்டைத் திறந்து பார்த்து உள்ளார். அப்போது வீடு சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் உணவுப் பொருட்களை அதிக அளவில் வீணடித்து கிடந்தது கண்டு ஆத்திரம் அடைந்த அனுசியா, மகேசை திட்டி உள்ளார்.

இதில் கோபமடைந்தவர் கடந்த மாதம் 17ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் தனது கணவனை காணவில்லை கண்டுபிடித்து கொடுக்குமாறு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுத்தமாக வீட்டை வைத்துக் கொள்ளவில்லை என மனைவி திட்டியதால் கோபித்துக் கொண்டு காதல் கணவன் காணாமல் போனது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story