/* */

வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குகிறது

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குவதற்கான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குகிறது
X
மழை பைல் படம்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது :- தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.25) இரவு அல்லது நாளை (அக்.26) காலையில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது, தமிழகம், உள் கா்நாடகம், கேரளம், தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் முதல் டிசம்பா் வரை பெய்யும். ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28ம் தேதி தொடங்கியது.

Updated On: 25 Oct 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது