வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குகிறது

வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குகிறது
X
மழை பைல் படம்
வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் இன்று இரவு துவங்குவதற்கான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது :- தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.25) இரவு அல்லது நாளை (அக்.26) காலையில் தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. அதாவது, தமிழகம், உள் கா்நாடகம், கேரளம், தெற்கு ஆந்திரம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.

வடகிழக்குப் பருவமழையின் இயல்பான அளவு 449.7 மி.மீ. நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பை ஒட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபா் முதல் டிசம்பா் வரை பெய்யும். ஒவ்வோா் ஆண்டும் அக்டோபா் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். கடந்த ஆண்டு (2020) வடகிழக்குப் பருவமழை தாமதமாக அக்டோபா் 28ம் தேதி தொடங்கியது.

Tags

Next Story
Similar Posts
துப்பாக்கி விபத்தில் பெண் பலி! தாய் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு, சிறுவனின் விளையாட்டு மரணமாக மாறியது!
குடி பழக்கத்தால் சுழன்ற குடும்பம்
பள்ளியில், குழந்தைகளின் உடல்நலம்  மற்றும் சத்துணவு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
அந்தியூரில் புதிய யூனியன் அலுவலகத்திற்கு பூமி பூஜை
Adaippu Natchathiram in Tamil
சென்னைக்கு வரப்போகுற ஆபத்து! கவனமா இருங்க மக்களே...! #Fengal
போதைப்பொருள்... சட்டவிரோத பணம்.. மர்ம அழைப்பு... 17 லட்சம் அம்பேல்! நடந்தது இதுதானாம்..!
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு கச்சை கட்டும் நிகழ்ச்சி..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
ai in future agriculture