/* */

கோவை அருகே பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை

பெண்ணின் கை, கால்களை கட்டி, கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கோவை அருகே பட்டப்பகலில் பெண்ணை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை
X

சூலூர் காவல் நிலையம் (கோப்பு படம்)

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிந்தாமணிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி (45). கல்யாணசுந்தரம் சவுதி அரேபியாவில் ப்ராஜெக்ட் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். விஜயலட்சுமி சிந்தாமணிபுதூர் பகுதியில் உள்ள வீட்டில் தனது மகன்கள் ஜோதிஸ், ஹரீஸ் ஆகியோருடன் வசித்து வருகிறார். இதனிடையே அவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்துள்ளது. அப்பணிகளை அவிநாசி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் நடத்தி வரும் பாலாஜி பில்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மூன்று நாட்களாக கட்டிட வேலைகள் நடந்து வந்துள்ளது. அப்பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாபு என்பவர் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் விஜயலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த பாபு அவரை செல்லோ டேப்பால் வாய், கை, கால்களை கட்டிப் போட்டுள்ளார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய், செல்போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். பின்னர் பள்ளிக்குச் சென்றிருந்த விஜயலட்சுமியின் மகன் ஹரிஷ் வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு வெளியில் தாழிடப்பட்டு இருந்துள்ளது. தனது மகன் வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து வீட்டிற்குள் இருந்து விஜயலட்சுமி சத்தம் எழுப்பியுள்ளார். இதையடுத்து தனது அம்மாவை ஹரிஷ் அழைத்த போது, அவர் வெளியில் இருந்து கதவை திறந்து கொண்டு உள்ளே வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி கதவை திறந்து கொண்டு ஹரிஷ் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, விஜயலட்சுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டு அருகில் இருந்த ஹரிஷின் சித்தப்பாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு அவர் தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டில் இருந்த பெண்ணின் கை, கால்களை கட்டி பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 11 Jan 2024 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க