அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் பாஜாகவின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-07-04 15:15 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய வாலிபர் சங்கத்தினர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பிகாஷ் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சே.அறிவழகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.ஜி.மணிகண்டன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.அரிகிருஷ்ணன், வாலிபர் சங்க பொருளாளர் எஸ்.பார்த்திபன ஆகியோர் கலந்து கொண்டு அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். உடல் தகுதி தேர்வில் வெற்றி பெற்று காத்திருக்கும் 3லட்சம் இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அக்னி பாத் திட்டத்தை கண்டித்தும் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்கம்,மாணவர் சங்கம், அனைத்து இளைஞர் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவற்றை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜக மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News