தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள்

கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் கோலியனூர் ஒன்றியத்தில் பணி செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது

Update: 2021-11-24 16:01 GMT

தூய்மை பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கிய ஊராட்சி களப்பணியாளர்கள் சங்கம்

தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியத்தில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆகியோருக்கு மாவட்ட தலைவர் பாஸ்கரன் அரிசி,காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

அப்போது ஒன்றிய தலைவர் பாலச்சந்தர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News