விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு குறித்து எஸ்.பி நேரடி ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-24 06:30 GMT

விழுப்புரம், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஊரடங்கில் வாகனங்களில் வந்தவர்களை நிறுத்தி ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு மாவட்டத்தில் சரியாக கடைபிடிக்க படுகிறதா  என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் வாகனங்களில் வந்தவர்களை  நிறுத்தி, அவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் வெளியே வருகிறார்களா என ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்து காவல்துறை மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News