விழுப்புரம் மாவட்டத்தில் உச்சத்தில் கொரானா; கட்டுப்படுத்த கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் அதிகரிதுது வரும் கொரானா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2021-05-27 15:56 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று 798 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது. இதவரை 31,954 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இன்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை 226 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இன்று மட்டும் 526 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 27,541 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 4187 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இதனை கட்டுப்படுத்த  துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News