விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தப்பட்ட பகுதியில் ஆட்சியர் அண்ணாதுரை நேரடி ஆய்வு செய்தார்

Update: 2021-05-26 16:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைபடுத்தப்பட்ட பகுதியான அயனாம்பாளையம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்

விழுப்புரம் மாவட்டம், கோலியனுர் ஊராட்சி ஒன்றியம், திருவாமத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அயனாம்பாளையம் பகுதியில் தொற்று அதிகரித்ததால்  அந்தப்பகுதி தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்  அண்ணாதுரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பால் மற்றும் காய்கறிகள் வழங்கப்படுகிறதா என  கேட்டறிந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News