விழுப்புரத்தில் வாக்காளர் அடையாள அட்டை இயந்திரம் தொடங்கி வைப்பு

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் கலர் அடையாள அட்டை வழங்கும் இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2022-03-02 10:28 GMT

வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கினார் விழுப்புரம் கலெக்டர் மோகன்.

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள தேர்தல் கணினி நிரலாளர் அறையில் Kiosks இயந்திரம் மூலம் மின்னணு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.  வாக்காளர்களுக்கு, மாவட்ட கலெக்டர் த.மோகன் இன்று (02.03.2022) அட்டைகளைை வழங்கி தொடங்கி வைத்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், வட்டாட்சியர் (தேர்தல்) சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர்.

Tags:    

Similar News