மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-12 02:00 GMT

மாவட்ட ஆட்சியர் மோகன் 

விழுப்புரம் மாவட்டத்தில்,  கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில்,  பாதுகாப்பு மற்றும், வானிலை எச்சரிக்கையை  கருத்தில் கொண்டு,  கடந்த 9 ந்தேதி முதல்,  பள்ளி கல்லூரிகளுக்கு தினந்தோறும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து வந்தது.

அவ்வகையில், இன்றும் மழை நீடிக்கும் என்ற வானிலை எச்சரிக்கை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை (12/11/21) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News