விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுக்கூட்டம்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-07 13:45 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள். 

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில செயலாளர் பி‌.ஜீவா, மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மாவட்ட தலைவர் பி.முருகன், மாவட்ட பொருளாளர் பி.உமா, மாவட்ட துணைச்செயலாளர்கள் எம்கே.முருகன், ஜி.ஜெயக்குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வி, பி.முருகன், எம்.யுகந்தி, எம்.முத்துவேல் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News