விழுப்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 45 நிறுவனங்கள் பங்கேற்பு

Update: 2022-07-02 08:45 GMT

விழுப்புரத்தில் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் இ.எஸ். கலை கல்லூரியில் இன்று சனிக்கிழமை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது,

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாமிற்கு எக்ஸ்னோரா தலைவர் ஆ‌கனகராஜ் தலைமை தாங்கினார்,முகாமை விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் எஸ்.செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் பி.தமிழ்ச்செல்வி, ஆணையர் போ.சரேந்திரஷா ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர், முகாமில் சுமார் 45 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வேலைக்கு ஆட்களை தேர்வு செய்தனர், முகாமில் எக்குடாஸ் அறக்கட்டளை, ராஜ் அறக்கட்டளை, எக்சனோரா உள்ளிட்ட அமைப்புக்கள் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News