விழுப்புரத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி

விழுப்புரத்தில் கலெக்டர் மோகன் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி எடுக்கப்பட்டது

Update: 2021-12-09 14:31 GMT

விழுப்புரத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க உறுதி மொழி ஏற்றனர்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி கலையரங்கத்தில், சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் அரசு சட்டக்கல்லூரி இணைந்து பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சட்டம் 2013 விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.மோகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ந.ஸ்ரீநாதா ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News