விழுப்புரம் மாவட்டத்தில் தினந்தோறும் ஒருவர் இறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரானா தொற்றுக்கு தினந்தோறும் ஒருவர் உயிரிழந்தபடி உள்ளனர், இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித பீதி உருவாகியுள்ளது

Update: 2021-04-29 15:30 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 359 பேருக்கு கொரானா தொற்று உறுதியானது, இதவரை 18,551 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் இதுவரை122 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

வியாழக்கிழமை மட்டும் 132 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர், இதுவரை மாவட்டத்தில் 16,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மீதமுள்ள 1711 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 15ந்தேதி முதல் இதுவரை 9 பேர் இறந்து உள்ளனர்,சில நாட்களாக இறப்பு தினந்தோறும் நடப்பதால் மக்களிடையே ஒரு வித பீதி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News