விழுப்புரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஒ இன்று பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக ப. காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Update: 2021-09-13 14:47 GMT

விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் ப.காந்தி

விழுப்புரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இருந்த லோகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார்.  அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வமாக கொண்ட ப.காந்தி விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.  அவருக்கு மாவட்ட அலுவலர்கள் மற்றும் மாவட்ட செய்தியாளர்கள் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News