ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளை உறுதி மொழி எடுக்க வைத்த விழுப்புரம் காவல்துறை

விழுப்புரம் நகரத்தில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சுற்றியவர்களை காவல்துறையினர் நிறுத்தி உறுதி மொழி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினர்

Update: 2021-05-22 07:15 GMT

ஊரடங்கில் தேவையின்றி வாகனத்தில் வந்தவர்களை உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைத்த விழுப்புரம் காவல்துறையினர்

விழுப்புரம் நகர பகுதியில் முழு ஊரடங்கினை மதிக்காமல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி இருசக்கர வாகனத்தில் பலர் சுற்றி வருகின்றனர்.

அவ்வாறு வந்த வாகனங்களை தடுத்து நிறுத்திய காவல் உதவி ஆய்வாளர்கள் மருது, பாலசிங்கம், பாஸ்கரன், மற்றும் போக்குவரத்து காவலர்கள் ஆகியோர் வாகன ஓட்டிகளை, தேவையின்றி வெளியே சுற்றமாட்டோம், அரசின் உத்தரவை மதித்து நடப்போம் என உறுதிமொழி எடுக்க வைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News