விழுப்புரத்தில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

Update: 2021-05-25 13:00 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் 18 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணியை விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற முகாமில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தனர்,

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News