விழுப்புரத்தில் நல திட்ட உதவிகள்: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு 907 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2021-12-08 10:45 GMT

விழுப்புரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சர் பொன்முடி

விழுப்புரத்தில் புதன்கிழமை  மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும்  பல்வேறு துறையின் சார்பில் ரூ.8, 20,93,867 ,மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் க.பொன்முடி, 907 பயனாளிகளுக்கு வழங்கினார்,

அப்போது மாவட்ட கலெக்டர் மோகன், எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி,டாக்டர் இரா. இலட்சுமணன், கோட்டாட்சியர் ஹரிதாஸ் ,நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா,மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News