சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் நகராட்சி சார்பில் சிறப்பு தூய்மை பணி திட்டத்தை அமைச்சர் பொன்முடி இன்று தொடங்கி வைத்தார்

Update: 2021-12-28 09:45 GMT

சிறப்பு தூய்மை பணி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சி சார்பில், விழுப்புரம் நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாபெரும் சிறப்பு தூய்மை பணியினை அமைச்சர் பொன்முடி இன்று (28.12.2021) தொடங்கி வைத்தார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாகடர்.இரா.இலட்சுமணன, விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News