தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்

Update: 2021-07-10 14:37 GMT

செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் மஸ்தான் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது உணவிற்கு தகுதியற்ற, தரமற்ற பழுப்பு நிற அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி மக்களுக்கு விநியோகம் செய்ய அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அந்த அரிசியை பார்வையிட்ட அமைச்சர் மஸ்தான், உடனடியாக அந்த அரிசியை விநியோகத்திற்கு அனுப்ப வேண்டாம் என கூறி, உணவிற்கு ஏற்ற தரமான அரிசியை அனுப்புமாறு கூறினார்.

Tags:    

Similar News